இடுகைகள்

தேநீரைத் தேற்றுதல்

  பத்து பதினைந்து கிளாஸ்கள்  வரிசையில் வீற்றிருக்க அத்தனையும்  சீ ராக நிரம்பும்படி கைவரிசைக் காட்டி  தேநீர் தயாரிக்கும் அண்ணன் ஒருவரை பத்து பதினைந்து  ஆண்டுகளுக்குப் பிறகு சமீபமாய் சந்திக்க வாய்த்தது அவரது தேநீர் தயாரிக்கும் லாவகத்தில் தடுமாறல் தெரியவே காரணம் வினவினேன் சிலருக்கு சர்க்கரை தூக்கலா.. சிலருக்கு கம்மியா.. சிலருக்கு அறவே இல்லாது.. ஒருசிலருக்கு மீடியமா.. ஒரு வைத்தியரின் நிதானத்தோடு விசாரித்து தேநீர் தயாரிப்பதாய் நொந்துகொண்ட அவரை  தேற்றுவதற்குள் ஆறிப்போயிருந்தது கேட்டு வாங்கிய வழக்கமான தேநீர்                                    சாமி கிரிஷ்

தேநீரைத் தேற்றுதல்

படம்
  பத்து பதினைந்து கிளாஸ்கள்  வரிசையில் வீற்றிருக்க அத்தனையும்  சீராக நிரம்பும்படி கைவரிசைக் காட்டி  தேநீர் தயாரிக்கும் அண்ணன் ஒருவரை பத்து பதினைந்து  ஆண்டுகளுக்குப் பிறகு சமீபமாய் சந்திக்க வாய்த்தது அவரது தேநீர் தயாரிக்கும் லாவகத்தில் தடுமாறல் தெரியவே காரணம் வினவினேன் சிலருக்கு சர்க்கரை தூக்கலா.. சிலருக்கு கம்மியா.. சிலருக்கு அறவே இல்லாது.. ஒருசிலருக்கு மீடியமா.. ஒரு வைத்தியரின் நிதானத்தோடு விசாரித்து தேநீர் தயாரிப்பதாய் நொந்துகொண்ட அவரை தேற்றுவதற்குள் ஆறிப்போயிருந்தது கேட்டு வாங்கிய  வழக்கமான தேநீர்                                    சாமி கிரிஷ்

சிறுகதை

படம்
வரன்களின்  முரண்கள் அலைபேசியை தலைமாட்டிற்கு அருகிலேயே வைத்தவாறு தன் வாழ்வின் மிக முக்கியமான அழைப்புக்காக காத்திருந்தாள் வசந்தா. கடந்த அரைமணி நேரமாக அவளுக்கு வந்த அனைத்து அழைப்புகளையும் அறவே தவிர்த்துவிட்டு தான் ஆவலோடு விரும்பும் அழைப்பை ஆசையோடு எதிர்பார்த்திருந்தாள். தான் சமீபமாய் ரவி என்பவரை காதலித்து வருவதையும் அவரை தனது மாமா முத்துவின் அனுமதியோடு திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் முத்துவிற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு வசந்தா அலைபேசியிருந்தாள்.அவரோ 'நான் வெளியில் இருக்கிறேன், வீட்டுக்கு போய் அழைக்கிறேன்' என்று கூறி வைத்துவிட்டார். தனது மாமாவின் அழைப்புக்காகத்தான் என்ன சொல்லப் போறாரோ என்ற பதட்டம் கலந்த ஆர்வத்தோடு படுத்திருந்தாள் வசந்தா.       வசந்தாவுக்கு மூன்று வயது இருக்கும் போதே அவளுடைய அப்பா இறந்து விட்டதால் வசந்தாவும் அவளது அக்காக்கள் இருவரும் அண்ணனும் பக்கத்து ஊரில் உள்ள தாய்மாமனான முத்து வீட்டில்தான் படித்து முடிக்கிற காலம் வரை இருந்தார்கள்.மாமாவின் மேல் வசந்தாவிற்கு கொள்ளை பாசம்.அவருக்கும் வசந்தா மேல்தான் மற்றவர்களைவிட கூடுதல் அன்பு.வசந்தாவின் அக்காக்களை...

அரசுப் பள்ளிகளில் சேர்ப்போம்..பாடல்

படம்
 அரசுப் பள்ளியில் சேர்ப்பதும் அடிப்படை உரிமையே..

குழந்தை வழிச் சாலை

குழந்தை தின்று வீசிய கரும்பு சக்கைகளில் கொஞ்சம் கூடுதலாய் மொய்த்தன எறும்புகள்